நெஞ்சு வலியில் துடிக்கும் கோபி. அம்பலமாக போகும் கோபியின் நாடகம்...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலஷ்மி தொடரில் தன் காதலியை அடைய தன் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருக்கும் குடும்பத்தை ஏமாற்ற அடிக்கடி பல நாடகங்கள் நடத்தி வருகிறார் கோபி. அதே போல் இந்த வாரமும் நெஞ்சு வலி வருவது போல நடித்து அவரோட அப்பாவின் பிறந்த நாள் விழாவுக்கு ராதிகா வருவதை தடுக்க பிளான் செய்கிறார். இத அவர் தன் நண்பரோடு மொபைல் போனில் பேசுவதை பாண்டியன் ஸ்டோர் கதிர் கேட்டு விடுகிறார்.
பிறந்த நாள் விழா தொடங்க இரு குடும்பத்தாரும் சந்தோஷமாக அமர்ந்திருக்க கோபி தன்னோட பிளான் நிறைவேற்ற நெஞ்சு வலி வந்தது போல் நாடகம் ஆரம்பிக்கிறார்.....குடும்பத்தார் அனைவரும் பதறி போக பாண்டியன் ஸ்டார் மூத்த அண்ணன் மூர்த்தி கோபியை காப்பாற்ற உதட்டோடு உதடு வைத்து காற்று குடுக்கும் அளவுக்கு போகிறார். அதிர்ந்து போன கோபி அவரிடம் இருந்த காப்பாத்தி கொண்டு சற்று வலி குறைந்தது போல் சொல்லி தப்பித்துக்கொள்கிறார்.
கதிர் கோபியின் நாடகத்தை அம்பாலா படுத்தினாரா....
ராதிகா பாக்யா வீட்டிற்கு வந்தாரா...
இந்த வாரம் முழுக்க இதை சுற்றி தான் கதை நகரும்.


No comments:
Post a Comment